குழந்தை தினத்தை முன்னிட்டு...


குழந்தை தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி 13/ 11/ 2018 அன்று காலை நடைபெற்றது. ஓவியப் போட்டியில் மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நான்கு பிரிவுகளாக மலரும் இலையும் ,இயற்கை காட்சி, எனது ஊர் / எனது கிராமம் , வனவிலங்குகள் போன்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற்றன திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சார்ந்த 70க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 650க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா 14 /11/ 2018 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது.அந்நிகழ்வில் காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி அனைவரையும் வரவேற்றார் முனைவர் மதிவாணன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார் . சந்திரபாபு , நரசிம்ம பாண்டியன், காஜா மொய்தீன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன கைத்தொழில் மற்றும் கைவினை கலைபொருட்கள் செய்வோர் நல சங்கத்தின் தலைவர் திருமதி . மங்களாதேவி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.



Siva Sathiyavalli Posted by Siva Sathiyavalli

Curator at Government museum, Tirunelveli

views: 789
   

 

News Discussion

Leave a Comment

Note: HTML is not translated!