பணக்குடி அருகே வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்து


நேற்று மதியம் 2-30 மணியளவில் பணக்குடி அருகே வடமாநில சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்ததில் வேனில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் காயங்களுடனும், மூவர் மிகவும் ஆபத்தான நிலையிலும் இருந்தனர். அந்த வழியாக சென்ற மத்திய இணையமைச்சர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டார். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வீரர்களின் உதவியுடன் வேனில் சிக்கயவர்களை மீட்டனர். அவர்களை உடனடியாக வள்ளியூர் மற்றும் கன்னியாகுமரி மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் மத்திய இணையமைச்சர் ஏற்றி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். தனது உதவியாளர்களை மருத்துவமனைகளுக்கு சென்று தேவையான உதவிகளை செய்ய பணித்துள்ளார்.


WhatsApp Posts Posted by WhatsApp Posts

Shared Content on WhatsApp

views: 1724