திருவட்டார் அரசு உயர் நிலைப்பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்பட்டது

திருவட்டார் அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் முட்புதர்களால் சூழப்பட்டு மாணவ மாணவிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் விதத்தில் விஷ ஜந்துக்கள் உலாவும் இடமாக இருந்து வந்துள்ளது. இதனை சரி செய்ய அரசு அலுவலர்களிடம் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாததால் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் ஏற்பாட்டை செய்திருந்தார பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோதங்கராஜ். அதன் படி சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து இன்று இந்த பள்ளியின் வளாகத்தை சுத்தம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோதங்கராஜ், சமூக ஆர்வலர்கள் பிரதீஷ், திலீப் , அன்ஸ்கர், ஜஸ்டின் ராஜ் உள்ளிட்ட பல்வேறு இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.


views: 2091