டாஸ்மார்க் கடைகளை திறப்பதை நிறுத்திவிட்டு அரசு பள்ளிகள் மூடப்படுவதை தடுத்தால் நாடு உருப்படும் !

 கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையோர குற்றியார் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளி ஒன்று உள்ளது சுமார் 50  குழந்தைகள் மட்டுமே இங்கு படிக்கின்றனர் இன்றைய கால சூழ்நிலையில் நகரங்களில் கல்வி வியாபார மயமாதலால் நமது குழந்தைகள் தரம் உயர்ந்த தனியர் பள்ளிகளில் படித்தால் அவர்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும் எனும் குருட்டு நம்பிக்கையை மூலதனமாக கொண்டு தனியார் பள்ளிகள் பணம் சம்பாதித்து கொண்டு இருக்கின்றது இதனால் பல அரசு பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளது அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்ததுதான் இந்த குற்றியார் அரசு நடுநிலை பள்ளி சுமார் 300 குழந்தைகள் படித்த பள்ளி இன்று 50 குழந்தைகள் மட்டுமே படிக்கின்றனர் எனவே இந்த பள்ளியை  நகரங்களில் உள்ள ஸ்மார்ட் கிளாஸ் தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் ஆய்வாளர் Sam AB Positive மற்றும் மனிதம் தேடி குழு நண்பர்கள் இணைந்து இன்று அரசு பள்ளியின் சுவர்களை வண்ணம்பூசி சுவர் ஓவியங்கள் வரைந்து  பள்ளியை சுற்றி பூச்செடிகள் நட்டோம் அது மட்டுமல்லாமல் நான்கு கணினிகள் ஒரு சிறிய நூலகம் மற்றும் ஒரு LCD திரை மற்றும் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி மரத்தாலான புதிய மேசை மற்றும் இருக்கைகள் என பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளது அரசு பள்ளியா இது என அனைவரும் ஆச்சர்ய படும் வகையில் உள்ளது இந்த பள்ளியில் பெரும்பாலும் மலைவாழ் மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் மட்டுமே படிக்கும் இந்த பள்ளியில் நடைபெரும் வளர்ச்சி பணிகளால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் 75% வளர்ச்சி பணிகள் மட்டுமே இதுவரை நடந்து முடித்து உள்ளது விரைவில் முழு பணிகளும் முடிக்கப்படும் அடுத்த ஆண்டு இந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே எங்கள் நோக்கம் மேலும் உங்கள் பகுதியில் உங்கள் கண்முன் ஏதேனும் அரசு பள்ளி மூடும் தருவாயில் இருந்தால் அதை உங்களால் முடிந்த அளவு நண்பர்கள் இணைந்து அரசு பள்ளிகளை புதுப்பிக்கும் முயற்ச்சியல் ஈடுபடுங்கள் எங்களால் முடிந்த உதவிகளை செய்ய எங்கள் குழு தயார் ! இந்த பணிக்கு முதுகெலும்பாக இருந்த ஆய்வாளர் சாம்சன் அவர்களுக்கும் மேலும் பல்வேறு உதவிகள் வழங்கிய Rajasimmon AB அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

கல்வி தனியார் மயமாக்கப்படுவது தடுக்கப்பட்டு இலவசமாக்கப்படும் நாள்தான் நமது இந்தியா வல்லரசாகும் !
நமது தமிழக அரசு டாஸ்மார்க் கடைகளை திறப்பதில் காட்டும் அக்கரையை நிறுத்திவிட்டு அரசு பள்ளிகள் மூடப்படுவதை தடுத்தால் நாடு உருப்படும் !


 






Dison Duke Posted by Dison Duke

Dison Duke

views: 2005