கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும்தான் பால்வெட்டு உண்டு !

பால் வெட்டுன்னா என்னவென்று தெரியுமா?

ரப்பர் மரத்தில் பால் எடுப்பது பால்வெட்டு எனப்படும். பொதுவாக பால்வடிப்பு என்பதே சரியான வார்த்தை. ஆனால் கத்தியால் மரப்பட்டையை வெட்டி பால் எடுப்பதால் பால்வெட்டு என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.

விடியற்காலை 2 மணியிலிருந்து மரத்தில் பால் வெட்டுவார்கள். மரத்துக்கு 1.50 முதல் 2 ரூபாய் வரை கூலி. 300 முதல் 400 மரம் வரை பால்வடிப்பு செய்பவர்களும் இருக்கிறார்கள்.

பால்வடிப்பு செய்து, பின்னர் சிரட்டைகளில் சேகரிக்கப்பட்ட ரப்பர் பாலை கேன்களில் எடுத்து ஆசிட் கலந்து உறைய வைத்து, உருளையில் கொடுத்து ரப்பர் ஷீட்டுகளாக மாற்றி, ஸ்மோக் ஹவுசில் போட்டு உலரவைத்தால் தரமான ரப்பர் ஷீட் ரெடி.

பால்வெட்டு என்பதன் பொருள் பரவலாகல்லோரும் அறிந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி.

திருவட்டாறு சிந்துகுமார் Posted by திருவட்டாறு சிந்துகுமார்

Reporter at Kumudam No.1 Tamil Weekly

views: 5283
   

Hi , are you passionate about sharing your knowledge , tips or thoughts by video or blog ? Please write to us @ kanyakumarians.com@gmail.com


Related Blogs