நல்ல பிரெஷ் மரச் சீனி கிழங்கை வாங்கி தோல் உரித்து, கேரட் துருவியில் வைத்து நன்கு துருவவும்.
சிறிது உப்பு சேர்த்து பிசைந்து 5 நிமிடம் வைத்திருக்கவும்.
பிறகு கிழங்குத் துருவலை நன்கு பிழிந்து எடுக்கவும்.
புட்டு அவிக்கும் குழாயில் தடுப்புச் சில் போட்ட பின்னர் சிறிது துருவிய தேங்காய் முதலில் போடவும்.
பின்னர் சிறிது கிழங்கு துருவல், பின்னர் தேங்காய் துவல் என குழாயின் அளவைப் பொறுத்து அடுக்கடுக்காக போடவும்.
ஆவியில் புட்டு அவித்து, வெந்ததும் கவனமாக பிளேட்டில் புஸ்க் என புஷ் பண்ணவும்.
அப்புறம் என்ன ? மிளகாய் கறிவேப்பிலை, பூண்டு, ஜீரகம் நசுக்கி தேங்காய் எண்ணெய் சேர்த்து புட்டு சாப்பிடலாம்.
சர்க்கரை (சீனி) சேர்த்து சாப்பிடலாம். கூடவே கட்டன் சாயா இருந்தால் நல்லது.
கடலைக் கறி அல்லது மீன் கறி சேர்த்து குழைத்து ஒரு பிடி பிடிக்க ருசியில் நாக்கு மீண்டும் புட்டு கொண்டா புட்டு கொண்டா என கேட்கும்.
அப்புறம் என்ன கிழங்கு புட்டு பேஷ் பேஷ் நன்னாருக்கு என்பீர்கள்.
அது யாரு படிச்சிட்டிருக்கிறப்பவே ழ்ழ்ழ்ழ் ன்னு எச்சில் வடிச்சிட்டிருக்கிறது?
பின் குறிப்பு:
புட்டை பொருமையாக பிட்டு சாப்பிடுங்கள் அவசர அவசரமாக விழுங்கி உங்களுக்கு விக்கல் வந்தால் கம்பனி பொறுப்பல்ல :)