ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தச்சமலை பகுதியில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தினை காக்கும் விதமாக விவசாயம் காப்போம் அமைப்பின் சார்பாக அவர்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி மற்றும் தேன் பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மேலும் தேனீ வளர்பின் மூலம் பெறப்படும் தேன் மற்றும் அவர்களின் உற்பத்தி பொருட்களை மக்களிடம் நேரடியாக சந்தை படுத்தவும் திட்டமிட்டுள்ளோம் மலைவாழ் மக்களிடம் இருந்து பெறப்படும் தேன் மற்றும் மிளகு போன்ற இயற்கை பொருட்கள் தேவையான நபர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள், நவீன் : 94876 17967 ஓகி புயலால் பதிக்கப்பட்டு வீடுகளை இழந்த #மலைவாழ் மக்களுக்கு இந்த விவசாயம் காப்போம் அமைப்பின் சார்பாக வீடுகள் கட்டிக்கொடுக்கபட்டது குறிப்பிடத்தக்கது