Pallivilai

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பள்ளிவிளை காமராஜர் சிலையை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் நாடார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..

இந்த காமராஜர் சிலையை நாடார் சங்கத்தினர் அமைக்க இருப்பதாக கூறி அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்..
2006ம் ஆண்டு இந்த காமராஜர் சிலைய அன்றைய அமைச்சர்.சுரேஷ்ராஜன் திறந்து வைத்தார்..அதனால் அவரது தலைமையில் புதிய சிலையை நிறுவ இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து காமராஜர் சிலையை அதே இடத்தில் நிறுவதற்கு முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் கொடுப்பதாக திமுக சட்டமன்ற உறுப்பினர். என்.சுரேஷ்ராஜன் குமரிமாவட்ட திமுக செயலாளர் தெரிவித்துள்ளார்..

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பள்ளிவிளை ஜங்சனில் பெருந்தலைவர் காமராஜரின் திருஉருவ சிலை நிறுவப்பட்டுள்ளது..
இந்த காமராஜர் சிலையின் மூக்கு பகுதியை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்..
இந்த தகவலை அறிந்த கன்னியாகுமரி எம்.பி.வசந்தகுமார், எம் எல் ஏ விஜயதரணி, ராஜேஷ்குமார் ஆகியோர் சேதமடைந்த காமராஜர் சிலையை பார்வையிட்டு சேதப்படுத்திய மர்மநபரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்..இதில் பாராளுமன்ற தொகுதி அலுவல திறப்பு விழாவிற்கு வருகை தந்த காங்கிரஸாரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்...

Courtesy: Winnings

Courtesy: Winnings

Courtesy: Winnings