
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு சமூக உரிமைகள் வழங்குவதில் தலையிட்டு மாவட்ட வன அதிகாரி வீணான குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துடன் குமரிமாவட்ட வனம் மற்றும் பட்டா விவசாய நிலங்களை இணைக்கும் வனத்துறையின் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தியும், வன ஊழியர்கள் சொத்து பட்டியலை பகிரங்கமாக வெளியிட கேட்டும், சட்டவிரோத செயல்களை செய்து வரும் கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர்கள் இடமாற்றம் செய்து விசாரணை நடத்த கோரியும் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பழங்குடியின மக்கள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
views: 2104


Posted by







