குமரியில் அதிகரிக்கும் கனிமவள கொள்ளை


சப்தமின்றி வெடிக்கும் அதிபயங்கரமான வெடி மருந்துகள் உபயோகித்து தூள் தூளாக்கபடும் தேங்காய்பட்டணத்தில் அமைந்துள்ள சேண்ட பள்ளி மற்றும் ராமன்துறையில் உள்ள தண்டுமனி பாறைகள்.

தேங்காபட்டணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாக இரவு நேரங்களில் பூமியில் அதிர்வு ஏற்படுவதாக பரவலாக பேசப்பட்டது. இந்த அதிர்வின் மூலம் பல வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது

இந்த அதிபயங்கர வெடிமருந்து உபயோகித்து கனிம வள திருட்டினால் உயிர் பலிகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.


தேங்காய் பட்டணத்தை சுற்றியுள்ள பனங்கால் முக்கு, கீழ்குளம், ஒசரத் விளை, ராமன் துறை, முள்ளூர் துறை போன்ற பகுதிகளில் உள்ள வீடுகள் இதனால் விரிசல் ஏற்பட்டு பெரும் ஆபத்துகள் ஏற்படும் முன் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


views: 2200