திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் ......?


புகழ்பெற்ற பழம்பெரும் புண்ணிய வழிபாட்டு தலம் திருவட்டார் ஆதிகேசவ திருக்கோயில்..
கோயில் அமைப்பிலும், வழிபாட்டு முறைகளிலும் தனித்துவம் பெற்ற திருக்கோயில்..
நிர்வாக சீர்கேட்டால் பெருமை இழந்த பெருமைக்குரிய திருவட்டாறு ஆலயம்..
பெருமையை மீண்டெடுக்க முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கோயிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய 2004ல் உத்தரவிட்டார்..
2007ல் திருப்பணிகள் துவங்கியது.. ஆனால் நிர்வாக பொறுப்பில் இருந்தவர்களின் பெரும் செயலால் திருப்பணி இன்றும் நிறைவு பெறாமல் தொடர்கிறது..
2017ல் இந்து முன்னணி சார்பில் பொன்மனை ஐயப்பன் திருப்பணிகள் இழுத்தடிக்கப்படுவது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது..
பலகட்ட விசாரணைக்கு பின் வைகுண்ட ஏகாதசி தினத்தில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து நீதிமன்றம் முக்கிய தீர்பை கூறியுள்ளதாம்...

Jaya Mohan Thirpparappu Posted by Jaya Mohan Thirpparappu

Writer & Reporter

views: 2358