For Advertising... Please Contact - 9940542560

புதுமண தம்பதிகள் நட்ட பலாமரம்....

புதுமண தம்பதிகள் நட்ட பலாமரம்....


நேற்று ஈஞ்சக்கோடு ஆர்.சி தேவாலயத்தில் ஒரு திருமண விழாவிற்கு சென்றிருந்தேன். மதிய வேளையில் தாலி கெட்டு நிகழ்சி முடிந்து, தேவாலய பதிவேட்டில் மணமக்கள் கையொப்பம் இட்டனர். பங்கு தந்தைகளும், அருட்சகோதரிகளும் வாழ்த்து சொல்லி முடித்ததும் சில இளைஞர்கள் தேவாலயத்திற்குள் வந்து மணமக்களை வெளியே அழைத்துச் சென்றனர்.

கல்யாணம் முடித்த கையோடு மணமக்களை எங்கே அழைத்து செல்கின்றனர் என்று கூடி நின்ற உற்றார் உறவினர்கள் வியப்புடன் நோக்கி நின்றனர். அருகிலுள்ள நடுநிலைப் பள்ளி மைதானத்தில் மணமக்களை அழைத்து சென்ற இளைஞர்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பலா மரக்கன்றை கொடுத்தனர். பள்ளி ஆசிரியைகள், மாணவர்கள், அருட்சகோதரிகள் முன்னிலையில் மணமக்களை கொண்டு பலா மரக்கன்றை நட செய்தனர்.

இளைஞர்களின் இச்செயலை பாராட்டாமல் இருக்க முடியுமா...

Courtesy: Jaya Mohan Thirparappu

     |