நேற்று இரவு துவங்கிய மழை தற்போதும் தொடர்ந்து பெய்திட்டே இருக்கு. இடி மின்னல், பயமுறுத்தும் இருண்ட கால நிலை வீட்டிற்கு வெளியே இறங்க தடுக்குது. நிலமை இப்படி இருக்க பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் நிலை பரிதாபம். இது போன்ற சூழலில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை கொடுப்பது வழக்கம். ஆனால் மாவட்ட கலக்டர் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. அதே நேரத்தில் திருவனந்தபுரம் மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு திருவனந்தபுரம் மாவட்ட கலக்டர் விடுமுறை கொடுத்துள்ளார். நம் மாவட்டத்தில் மார்த்தாண்டம், நாகர்கோவில் மேம்பால பணிகளால் ஏற்பட்டுள்ள சூழல், ரோடுகளின் அவல நிலை போன்ற காரணங்களால் இன்றைய காலநிலைக்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்திருக்க வேண்டாமா?..
தொடர் மழையும் விடுமுறையும்...
views: 3775