திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர்


திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர், பந்தளம் ராஜ குடும்பத்தினர், சபரிமலை தந்திரி ஆகியோருடன் சபரிமலையில் அனைத்து வயது பெண்களயும் அனுமதிப்பது தொடர்பான விவாதம் நடத்தினர். பந்தளம் குடும்பத்தினரும், தந்திரியும் ”உடனே சீராய்வு மனு போட வேண்டும்” என கூறினர். “நீதிமன்றம் விடுமுறை என்பதால் இப்போது முடியாது. 22-ம் தேதிதான் சீராய்வு மனு போடமுடியும்” என தேவஸ்வம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார். “ அப்படி எனில் அதுவரை பெண்களை அனுமதிக்கும் சுப்ரீம் கோர்ட் விதியை அமல்படுத்தக்கூடாது!” என அவர்கள் கேட்க, ”அதுதொடர்பாக வரும் 19.ம் தேதி நடக்கும் நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்யலாம்!” என தலைவர் கூறியதை அடுத்து விவாதத்தில் இருந்து தந்திரி மற்றும் ராஜகுடும்பத்தினர் வெளியேறினர்.

திருவட்டாறு சிந்துகுமார் Posted by திருவட்டாறு சிந்துகுமார்

Reporter at Kumudam No.1 Tamil Weekly

views: 1473