கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளதாகவும்,மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறை மூலம் அனைத்து மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது,பன்றி காய்ச்சலை ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும், பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்,வதந்திகளை நம்பவேண்டாம். காய்ச்சல்,இருமல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.பன்றி காய்சல் அறிகுறியால் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கபடுவதாகவும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்
views: 1770