நெகிழி ஒழிப்பு மற்றும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி


காரங்காடு வட்டார இளையோர் பணிக்குழு சார்பாக "நெகிழி ஒழிப்பு மற்றும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மாநாடு " 02.10.2018 (இன்று) காலை 9.30 மணிக்கு தூய தெரஸ் அரங்கம் கண்டன்விளையில் துவங்கி மதியம் 1.30 மணிக்கு மைலகோடு தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நிறைவுபெற்றது.

இதில் 450 கும் மேற்பட்ட இளைஞர்கள் இளம்பெண்கள் கலந்துகொண்டனர்.

இந்த பேரணியின்போது சாலை ஓரங்களில் நெகிழி கழிவுகள் இளைஞர்களால் அகற்றப்பட்டது. பேரணியினை குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் அவர்கள் துவக்கி வைத்தார்கள். அருட்பணி.ஜெகத்கஸ்பர் அவர்கள் மாநாட்டு சிறப்புரை ஆற்றினார்கள்..

views: 1506