மாற்றுத்திறனாளிகள் வாழ மனசு வையுங்க.. ஆட்சியருக்கு வேண்டுகோள்.


கன்னியாகுமரி மாவட்டம் காளிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெயன் ஆல்ட். மாற்றுத் திறனாளியான இவர் கடந்த 15ஆண்டுகளாக அமர்வு மட்டை பந்து போட்டியில் விளையாடி வருகிறார். சர்வதேச அளவில் இந்திய பாகிஸ்தான் இடையிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர். தனக்கு வீல்சேர் வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தும் பின் தன்னை போன்று திறமையான வீரர்களுக்கு வீல்சேர் வழங்கிடவும், அவர்களுக்கும் அரசு வேலை வழங்கிடவும் , ஊக்க தொகை வழங்க கேட்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

views: 2032
   

Related News