குமரி மாவட்டத்தில் தொடர் விபத்துக்கள்...
நகரின் முக்கிய பகுதிகளில் குடிநீருக்காகவும், இன்னும் யார் யாரோ பைபர் கேபிள் பதிப்பதற்காக தோண்டிக் கொண்டுருப்பது கொடுமை...
போக்கு வரத்து நெரிசலில் சிக்கி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.
கருங்கல் அருகே குளத்தில் கார் பாய்ந்து தந்தை மகள் பலி. நாகர்கோவில் ஆலம்பாறையில் கார் கால்வாயில் குளிப்பதற்கு பாய்ந்திருக்கிறது.
செட்டிக்குளம், பீச் ரோடு, கோட்டார், அவ்வை சண்முகம் சாலை , மீனாட்சிபுரம் பகுதிகளில் சாலைகள் சரியப்படாமல் சீரழிந்து கிடக்கிறது.
பெரும் விபத்துக்கள் ஏற்படுமுன் இந்த லாக்டவுன் காலத்தில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவெடிக்கை எடுத்திட வோண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
படத்தில் அரசு ஊழியர்களுக்காக நகரில் ஓடுகிற ஒரே ஒரு பஸ் அதுவும் பள்ளத்தில் சிக்கியுள்ள காட்சி...
2 | 1k views