பருவமழை சில நாட்களாக குமரியில் தொடர்ந்து பெய்து வருகிறது. கேரளாவின் ஒரு பகுதி கனமழையால் மிகுந்த பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. நம் மாவட்ட அணைகளும் நிரம்பி நிற்கும் நிலையில் இன்று மாலை முதல் மலையோரப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை அச்சத்தை கொடுக்கிறது. ஆனால் பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணிகளுக்காக தண்ணீர் வெளியேற்றி, தற்போது 20 அடி அளவில் மட்டுமே தண்ணீர் இருப்பது ஆறுதலாக உள்ளது. பலப்படுத்தும் பணிகளுக்காக தண்ணீர் வெளியேற்றாமல் இருந்திருந்தால் 8 ஆண்டுகளுக்கு பின் கோதையர், தாம்பிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கும். பெருஞ்சாணி தண்ணீரால் பரளியார் நிரம்பி செல்கிறது. மழையும் தொடர்கிறது....
views: 2975