சுசீந்திரம் கோபுரமும் லாட்டரி சீட்டும்...
திருவிதாங்கூர் மன்னர் ஆயில்லியம் திருநாள் மஹாராஜ ஆட்சிகாலத்தில் சுசீந்திரம் திருக்கோயிலில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டார். பிரம்மாண்ட திருக்கோயிலுக்கு, அதற்கேற்ப கோபுரம் அமைக்கவும் விரும்பினார்.
கோபுரத்திற்கு 40000 ரூபாய் மதிப்பீடு செய்தனர். ஆனால் கோபுரம் அமைக்க தேவைப்படும் நிதி ஒதுக்குவது , அன்றைய சூழலில் சாத்தியமில்லாத நிலை. அதிகாரிகள் தரப்பில் ஆலோசனைகள் நடந்தது. 40000 ரூபாய் திரட்ட லாட்டரி சீட்டு வெளியிடலாம் என்ற கருத்து வந்தது.
1874 ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி மன்னர் அனுமதி வழங்க முதல் முதலில் அரசு லாட்டரி சீட்டை அறிமுகப்படுத்தியது. 50000 ஒரு ரூபாய் விற்கப்பட்டு, அதில் 10000 க்கு பரிசுகள் வழங்கி, மீதி 40000 க்கு இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கும் சுசீந்திரம் கோபுரம் அமைக்கப்பட்டது. இன்று கேரளா அரசிற்கு வருவாயை கொடுக்கும் முக்கிய இடத்தில் லாட்டரி திட்டம் உள்ளது.
Courtesy: jawahar Clicks