கன்னியாகுமரிமாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. உதாரணமாக மாத்தூரில் தொட்டிப்பாலம், சுசீந்திரத்தில் கோயில் தேர், ஆரல்வாய்மொழியில் காற்றாலை, தேங்காபட்டணத்தில் தென்னை,கோட்டாறில் ரெயில் நிலையம், மார்த்தாண்டத்தில் பிரமாண்ட பாலம், திற்பரப்பில் அருவி, பேச்சிப்பாறையில் அணைக்கட்டு, குளச்சலில் மீன் பிடித்தொழில்,பத்மனாப புரத்தில் அரண்மனை, தோவாளையில் பூ என சொல்லிக்கொண்டே போகலாம்.
சில ஊர்களின் பெயர்களை நண்பர் Subash Ets அந்தந்த ஊரின் சிறப்புகளைக்கொண்டு சிறு குறியீடுகளுடன் ஆங்கிலத்தில் வடிவமைத்துள்ளார். பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது. நண்பரின் படைப்பாற்றலுக்கு பாராட்டுகள். வாழ்த்துகள் சுபாஷ்!!
views: 5420