கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணைக்கட்டின் மறு புறத்தில் உள்ள காணி செட்டில் மெண்டுகளில் காணி இன பழங்குடி மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அவர்களின் வசிப்பிடத்தில் அருகிலேயே காய்கறிகள், கிழங்கு பயிரிட்டு அவற்றை சாகுபடி செய்து படகில் பேச்சிப்பாறைக்கு வந்து, அங்கிருந்து குலசேகரத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்து திரும்புவார்கள். பள்ளிக்கூடத்துக்கு படிப்பதற்காக படகில் பேச்சிப்பாறைக்கு வந்து மாலையில் திரும்புவார்கள்.
views: 3416