For Advertising... Please Contact - 9940542560

சுவரொட்டி ஒட்டும் தொழிலாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு...

Nagercoil News  |        |   

கன்னியாகுமரி மாவட்ட சுவரொட்டி ஒட்டும் தொழிலாளிகள் வேலையில்லாமல் வாழ்வாதாரம் இழந்து தங்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுவதாக கூறி தங்களுக்கு நிவாரண நிதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்...


குமரிமாவட்டத்தில் சுமார் 200க்கும் மேற்ப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டும் தொழிலாளர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் வேலையில்லாமல் வருமானமின்றி வாடுவதால் வீட்டு வாடகை,அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமலும் எந்த வித ஒத்துழைப்பும் இல்லாமல் வாழ்வதாகவும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கியது போல் பதிவு செய்யாத எங்களுக்கும் நிவாரண தொகை கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என்று குமரிமாவட்ட ஆட்சியரிடம் ரஜினி மக்கள் மன்ற துணை செயலாளர்.R.S ராஜன் தலைமையில் மனு அளித்தனர்.இதில் சுவரொட்டி ஒட்டும் தொழிலாளர்களான சதிஸ்,கணேசன்,மாணிக்கம், ஜெயப்பால்,ஜோதி,ஆறுமுகம், சண்முகம் மற்றும் ஶ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்...

     |