கன்னியாகுமரி சுற்றுலா விழிப்புணர்வு பேரணி


உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா விழிப்புணர்வு பேரணி நடந்தது.

உலக சுற்றுலா தினம் நேற்று கொண்டாடப்பட்டது.இந்த ஆண்டு சுற்றுலா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி ஸ்ரீமணியா இன்டர்நேஷனல் கேட்டரிங் கல்லூரி சார்பில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணிக்கு கல்லூரி தாளாளர் கோபாலகிருஷ்னன் தலைமை வகித்தார்.முதல்ராஜசெல்வம் முன்னிலை வகித்தார்.மாவட்ட சுற்றுலா அதிகாரி நெல்சன், கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.பேரணி சர்ச்ரோடு ஜங்ஷன், ரயில்வே ஸ்டேஷன் வழியாக சென்று திரும்பி கன்னியாகுமரி காந்தி மண்டபம் வழியாக முக்கடல் சங்கமத்தில் நிறைவடைந்தது.பின்னர் அங்கு துய்மைபணியில் ஈடுபட்டனர்

views: 1505
   

Related News