For Advertising... Please Contact - 9940542560

ஈரானிலிருந்து வந்த குமரி மீனவர்கள்...

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஈரான் நாட்டில் பணி புரிந்து வந்தனர். கொரோனா நோய் தொற்றின் காரணமாக பணியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் இருந்தார்கள் இதையறிந்த மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு என் தளவாய்சுந்தரம் Bsc.BL அவர்களின் ஏற்பாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி_கே_பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். தனிமை படுத்தப்ட்டு 7 நாட்களுக்கு பிறகு இன்று (09/07/2020) பரிசோதனை முடிந்து அனைவரும் தங்கள் இல்லங்களுக்கு செல்லும் நிகழ்வினை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு என் தளவாய்சுந்தரம் அவர்கள் கொரோனா நிவாரணமாக இன்று (09/07/2020) அனைவருக்கும் தலா 5 கிலோ அரிசி மற்றும் 1000 ₹ ரொக்க பணத்தையும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் கடோலர அமைதி மற்றும் வளர்ச்சி குழு பங்கு தந்தை திரு ஸ்டீபன் அவர்கள் பள்ளம் பங்கு தந்தை திரு சூசைஆண்டனி அவர்கள் தமிழ்நாடு மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் திரு சேவியர்மனோகரன் அவர்கள் தோவாளை ஒன்றிய கழக செயலாளரும் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவருமான நானும் தோவாளை ஒன்றிய பெருந்தலைவர் திருமதி சாந்தினிபகவதியப்பன் அவர்கள் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக செயலாளர் திரு அழகேசன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அன்புடன்

எஸ் கிருஷ்ணகுமார்

     |