For Advertising... Please Contact - 9940542560

பன்றிக்கு வைத்த வெடியை கடித்த மிளா பலி...

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே பன்றிக்கு வைத்த வெடியை கடித்த இரண்டு வயது மதிக்க த்க்க மிளா வாய் சிதறி பலியான சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. கேரளாவில் யானைக்கு அண்ணாச்சி பழத்தில் வெடி வைத்து கொன்ற சய்பவம் போல் குமரிமாவட்டத்தில் மிளா வெடி வெடித்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

ஆரல்வாய்மொழி வடக்கு மலைப்பகுதியில் மிளா,காட்டுபன்றி,சிறுத்தைகள், குரங்குகள், யானைகள் என ஏராளமான காட்டு விலங்குகள் காணப்படுகின்றன.தற்போது கடலை பயிரிடப்பட்டுள்ளதால் பயிர்களை பன்றிகள் சேதப்படுத்தி விடாமல் இருக்க பன்றிகளை விரட்ட வெடி வைத்துள்ளனர்.இந்நிலையில் அந்த வழியாக வந்த மிளா ஒன்று பன்றிக்கு வைத்த வெடியை கடித்ததால் வாய் சிதறி பொய்கை அணையில் இருந்து தண்ணீர் வருகின்ற ஓடையில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளது. இது பற்றி வனசரக அலுவலகத்திற்கு அப்பகுதி வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் பூதப்பாண்டி வனசரகர் திலிபன், தலைமையில் வனவர் சக்திவேல், வன ஊழியர் துரைராஜ், வேட்டை தடுப்பு காவலர் ஜெகன், சபரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மிளாவினை சோதனை செய்தபோது அது இறந்தது தெரிய வந்தது. உடனே மிளாவினை ஆரல்வாய்மொழி வன அலுவலகத்திற்கு கொண்டு வந்து கால்நடை உதவி மருத்துவர் கிறிஸ்டோபால் ராய் தகவல் தைரிவிக்கப்பட்டது. பின்னர் மிளாவினை பிரேத பரிசோதனை செய்து வன அலுவலக வளாகத்தில் புதைத்தனர்.மேலும், வெடி வைத்தது யார் என்று விசாரனை நடத்தப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது..கேரளாவில் யானைக்கு அண்ணாச்சி பழத்தில் வெடி வைத்து கொன்ற சய்பவம் போல் குமரிமாவட்டத்தில் மிளா வெடி வெடித்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Courtesy: Winnings


     |   

Other Pages