துப்புவாளை - கன்னியாகுமாரி மீன் சந்தை
துப்புவாளை - சாவாளை
முட்கள் நிறைய உண்டு ஆனாலும் சுவையில் இவனை அடிக்க யாருமில்லை, அவித்து பின்னர் அதன் முட்களை எல்லாம் உருவி, தேங்காய் மசாலா அரப்பு சின்ன உள்ளி(காஸ்ட்லி) எல்லாம் சேர்த்து முட்டைத் துவரன் போல கிண்டி எடுக்க வேண்டும். மீன் புட்டு என்ற சிறப்பு பெயரும் இதற்குண்டு.
ஊர்காட்டுல 'மாப்பிள்ளை கள்ளி' மீன் என்ற வாய் மொழி கதையும் வேறுஉண்டு.
மேற்படி நீராகாரம் அருந்துவற்கு மிக அருமையான காம்பினேஷன்.
இரண்டு தினங்களுக்கு முன் மீன்புட்டு உண்டு 'மகிழ்ந்தோம்'.
Courtesy: Jawahar Clicks