பிரதான சாலைகள் சீரமைக்கும் பணி...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்ற நிலையில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர், இதனால் போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.இதற்காக அரசியல் கட்சியினர் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் உள்ளனர். தற்போது குமரிமாவட்டம் நாகர்கோவிலுக்கு தமிழக முதல்வர்.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வருவதையொட்டி பழுதான சாலைகள் வேகமாக நடைப்பெறுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். ஆனால் நிர்வாக தரப்பில் பாதாள சாக்கடை பணி மற்றும் குடிநீர் பணிகளுக்காக தொண்டப்பட்டு மூடிய இடங்கள் கடந்த வாரம் முழுவதும் பெய்த மழை காரணமாக சாலைகள் மிகவும் மோசமடைந்தது இதனால் பொதுமக்களின் தேவையை அறிந்து முதல்கட்டமாக ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலை மற்றும் பேலஸ் ரோடு,டிஸ்லரி ரோடு,காசி விஸ்வநாதர் கோயில் ரோடு என ரூபாய் 25 லட்சத்திற்கு சீரமைக்கும் பணி தொடங்கி நடைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது..
Courtesy: Winnings
Courtesy: Winnings
Courtesy: Winnings
Courtesy: Winnings
2 | 1k views