For Advertising... Please Contact - 9940542560

தோவாளை இளநிலை பொறியாளர் அலுவலகம்...

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சியில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகம் பழமை வாய்ந்த கட்டிடத்தில் இதுவரை செயல்பட்டு வந்தது. மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு என் தளவாய்சுந்தரம் Bsc.BL அவர்களின் முயற்சியால் பொதுப்பணித்துறையின் மூலமாக சுமார் ரூ.85 இலட்சம் செலவில் புதியதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தின் தரை தளத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகம் இன்று முதல் செயல்படத் துவங்கியது. அதை இன்று (26/06/2020) மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு என் தளவாய்சுந்தரம் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு எஸ் ஏ.அசோகன் அவர்கள், தோவாளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி சாந்தினிபகவதியப்பன் அவர்கள், மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் திரு பரமேஸ்வரன் அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர் திரு நெடுஞ்செழியன் அவர்கள், கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு பொறியாளர், தமிழ்நாடு மின்சார வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Courtesy: எஸ் கிருஷ்ணகுமார்

>

>

>

     |