பூதப்பாண்டியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி...
பூதப்பாண்டியில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நபரின் குடும்பத்தினருக்கு, 7 நாட்களுக்கு பின் நடத்தப்பட்ட மறுபரிசோதனையிலும் பாதிப்பு எதுவும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் சுற்றுவட்டார பொதுமக்கள் 91 பேருக்கு 24 ஆம் தேதி நடந்த பரிசோதனையில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது கூறப்பட்டுள்ளது.
எனினும் இனிவரும் நாட்களிலும் அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்போம்..
பூதப்பாண்டி பகுதியில் மதுரை சிறைச்சாலையிலிருந்து 21.6. 20 தேதி பூதப்பாண்டி வந்துள்ளார், அவர் சென்னையிலிருந்து வந்ததாக ஹெல்த் டிபார்ட்மெண்ட்க்கு புகார் சென்றுள்ளது. அதனடிப்படையில் 22.6.20 தேதி ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரியில் கொரனோ சோதனைக்க அனுப்பி வைக்கப்பட்டார்.
23.6.20 தேதி முடிவு பாசிட்டிவ் என வந்ததால் அவரை சிகிச்சைக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அவருடன் இருந்த அனைவரும் சோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு 108 மூலம் கொண்டு சென்றுள்ளனர்.