For Advertising... Please Contact - 9940542560

ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்கள் நேரில் சென்று...

நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய ஆணையராக திருமதி. ஆஷா அஜித் IAS
அவர்கள் நேற்றைய தினம் பதவி ஏற்றார்கள்.

இன்று அவர்கள் நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய கட்டிடம் கட்டுமானம் பணிகள், கிருஷ்ணன்கோவில் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், புளியடி எரிவாயு தகன கூடம் மற்றும் நாகர்கோவில் மாநகர முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணைக்கட்டு ஆகிய இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்கள்.

மேற்படி இடங்களில் இதுவரை நடைபெற்று வந்த பணிகள் குறித்து முன்னாள் மாநகராட்சி ஆணையர் திரு.சரவணகுமார் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

மேலும் மாநகராட்சி ஆணையர் திருமதி. ஆஷா அஜித் அவர்களின் பணி சிறக்க முன்னாள் மாநகராட்சி ஆணையர்
திரு. சரவணகுமார் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்Pic Courtesy: Jackson Herby

நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய கட்டிடம்Pic Courtesy: Jackson Herby

புளியடி எரிவாயு தகன கூடம்:Pic Courtesy: Jackson Herby

முக்கடல் அணைக்கட்டுPic Courtesy: Jackson Herby

     |   

Related Posts