For Advertising... Please Contact - 9940542560

சீதப்பால் - கொரோனா பரிசோதனை நடைப்பெற்றது

Nagercoil News  |        |   

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியம் தாழாக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட சீதப்பால் பகுதி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று  சீதப்பால் பகுதிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி அண்ணன் திரு என் தளவாய்சுந்தரம் Bsc.BL அவர்களின் ஏற்பாட்டில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சீதப்பால், சீதப்பால் காலனி பகுதிக்குட்பட்ட அனைத்து நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடைப்பெற்றது. மாண்புமிகு திரு என் தளவாய்சுந்தரம் அவர்கள் மற்றும் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு எஸ் ஏ அசோகன் அவர்களின் அறிவுறுத்தலின்படி (29/06/2020) பாதிக்கப்பட்ட இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியையும் கொரோனா பரிசோதனை நடைபெறும் பணியையும் நேரில் சென்று பார்வை.

இந்நிகழ்வின் போது தாழாக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் யோகஸ்ரீ அவர்கள் ஒன்றிய கழக துணை செயலாளர் திருமதி ரோகிணி அவர்கள் பேரூர் கழக செயலாளர் திரு ஐயப்பன் அவர்கள் தாழாக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் திரு பிரம்மநாயகம் அவர்கள் ஒன்றிய மாணவரணி செயலாளர் திரு கார்த்திகேயன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Courtesy: எஸ் கிருஷ்ணகுமார்

     |