நகை வியாபாரி இருவருக்கு கொரோனா...
நாகர்கோவில் வந்த நகை வியாபாரி இருவருக்கு கொரோனா...
அவர்கள் சென்று வந்த அனைத்து இடங்களும் கிறுமி நாசினி தெளித்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து இரயில் மூலம் நாகர்கோவில் வந்த மதுரை நகை வியாபாரிகளான செந்தில்நாதன் தனசேகர் நாகர்கோவிலுக்கு நேற்று முன் தினம் இரயில் மூலம் வந்துள்ளனர்.இவர்கள் இரயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ள நிலையில் சகோதரர் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியானதால் அவர்களை தொடர்ப்பு கொண்டு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்..
பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்ட இரு சகோதர்கள் சென்ற இடங்களான உணவகம்,நகைகடை,
ஆவின்பாலகம்,பேருந்து நிலையம் என பல்வேறு இடங்களுக்கு கிறுமி நாசினி தெளித்து அங்கு ஒருவார காலம் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்..இதனால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்..
Courtesy: Winnings
1 | 3k views